போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம்
ஓசூர்: போர்க் குற்றம் புரிந்துள்ள இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இராசு. மாறன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் இலங்கை அரசு போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த குற்றங்களுக்காக தண்டிக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.
இதில் பெங்களூர் தமிழ்ச் சங்க தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், செயலாளர் கோ. தாமேதரன், ஐடிஐ தமிழ் மன்ற தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், கூட்டத்தின் இறுதியாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை பன்னாட்டு, நீதிமன்றம் விசாரித்து தக்க நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வந்துள்ளது. இந்த மீறல்களை தண்டிக்கும் வகையில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும்.
தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனே எடுக்க வேண்டும்.
போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு, இந்திய அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவக் கூடாது போன்று பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications