ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு
டெல்லி: ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ தொய்பா அமைப்பும், ஐஎஸ்ஐயும்தான். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஐஎஸ்ஐ எந்த வழிகளிலெல்லாம் உதவியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஐஎஸ்ஐ அமைப்பை கோர்ட் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தால், அதை உடனடியாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தீவிரவாத அமைப்புகளின் வரிசையில் சேர்க்க வேண்டும். அமெரிக்கா அவ்வாறு செய்தால் ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றும். இதன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியும், அபாயமும் ஏற்படும். ஐஎஸ்ஐ அமைப்பையே கலைக்க வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட நேரிடும்.
தற்போது சிகாகோ கோர்ட்டில் சாட்சியம் அளித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐதான் முக்கியப் பங்கு வகித்ததாக கூறி வருகிறான். ஐஎஸ்ஐ அதிகாரிகள் தனக்குப் பயிற்சி கொடுத்ததாகவும், உளவு பார்க்க ஊக்குவித்ததாகவும், இன்ன பிற உதவிகளையெல்லாம் செய்ததாகவும் அவன் கூறி வருகிறான்.
இவை அனைத்தும் ஐஎஸ்ஐக்கு எதிரான ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட முடியும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications