ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு
டெல்லி: ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.
தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்தியது லஷ்கர் இ தொய்பா அமைப்பும், ஐஎஸ்ஐயும்தான். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஐஎஸ்ஐ எந்த வழிகளிலெல்லாம் உதவியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஐஎஸ்ஐ அமைப்பை கோர்ட் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தால், அதை உடனடியாக அமெரிக்க அரசு ஏற்றுக் கொண்டு தீவிரவாத அமைப்புகளின் வரிசையில் சேர்க்க வேண்டும். அமெரிக்கா அவ்வாறு செய்தால் ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றும். இதன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியும், அபாயமும் ஏற்படும். ஐஎஸ்ஐ அமைப்பையே கலைக்க வேண்டிய நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட நேரிடும்.
தற்போது சிகாகோ கோர்ட்டில் சாட்சியம் அளித்து வரும் பாகிஸ்தானிய அமெரிக்கரான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லி, மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஐஎஸ்ஐதான் முக்கியப் பங்கு வகித்ததாக கூறி வருகிறான். ஐஎஸ்ஐ அதிகாரிகள் தனக்குப் பயிற்சி கொடுத்ததாகவும், உளவு பார்க்க ஊக்குவித்ததாகவும், இன்ன பிற உதவிகளையெல்லாம் செய்ததாகவும் அவன் கூறி வருகிறான்.
இவை அனைத்தும் ஐஎஸ்ஐக்கு எதிரான ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட முடியும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications