ஊழல் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை-லோக்பால் குழு இன்று விவாதம்

மேலும் லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கும், அன்னா ஹசாரே தலைமையிலான இந்தக் குழுவினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
ஊழலில் திளைக்கும் அதிகாரிகளைக் கைது செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை தர வேண்டும் என்று லோக்பால் குழு தனது சட்டத்தில் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இது மிக அதிகமான தண்டனை என்றும், பொது மக்களில் ஒரு பகுதியான அதிகாரிகளுக்கு மட்டும் கடுமையான தண்டனை வழங்குவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.
லோக்பால் குழுவில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சரான சாந்தி பூஷண், மத்திய அரசின் இந்தக் கருத்தை எதிர்த்து வருகிறார். அதிகாரிகள் ஊழல் செய்வதைத் தடுக்க மிக மிக கடுமையான தண்டனை அவசியம் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் லோக்பால் குழுவில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும், ஊழல் அதிகாரிகளை விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரம் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்றும் இந்தக் குழு கோருகிறது. இதை மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது.
பேருக்கு மட்டும் குழுவை அமைத்துவிட்டு, அதற்கு உரிய அதிகாரங்களைத் தராமல் காலத்தை கடத்த மத்திய அரசு நினைப்பதாகத் தெரிகிறது. இதை ஹசாரே ஏற்க மறுத்து வருகிறார்.
மேலும் ஊழலில் சிக்கினால் பிரதமரையே கூட விசாரிக்கும் அதிகாரமும் இந்தக் குழுவுக்கு வேண்டும் என்று லோக்பால் குழு கோருவதையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கலைவது குறித்து மத்திய அரசின் சார்பில் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, ப.சிதம்பரம், சல்மால் குர்ஷித் ஆகிய அமைச்சர்களுடன் லோக்பால் குழுவினர் இன்று விவாதிக்கவுள்ளனர்.
அதே நேரத்தில் ஊழல் விவகாரத்தில் சிக்கும் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்குவது, பறிமுதல் செய்வது ஆகிய விஷயங்களில் லோக்பால் குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதான கருத்து நிலவுகிறது. மேலும் அவர்களது சொத்துக்களை ஏலம் விட்டு, ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழபபை ஈடுகட்டுவது என்ற லோக்பால் குழுவின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதே போல லோக்பால் சட்டத்தை ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இதில் இழுத்தடிப்பு செய்தால் ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பேன் என்று ஹசாரா எச்சரித்துள்ளதால் மத்திய அரசு செய்வதறியாது தவித்து வருகிறது.
இந்த லோக்பால் குழுவில் மேலே குறிப்பிட்ட அமைச்சர்கள், அன்னா ஹசாரே ஆகியோர் தவிர கர்நாடக லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே, சட்ட வல்லுனர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பல ஊழல்களை அம்பலப்படுத்திய அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்தக் குழுவுக்கு அரசியல்வாதிகள் ஒரு சவால் விட்டனர். இதில் உள்ளவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்களா என்று கேள்வி கேட்டனர். இதையடுத்து 24 மணி நேரத்தில் சொத்து விவரங்களை வெளியிட்டனர் இக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications