சேலத்தில் 150 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே பூட்டியிருந்த வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சேலம் மாவட்டம் அழுகாபுரத்தைச் சேர்ந்தவர் ரகுராமன். ஜவுளி வியாபாரி. இவர் தனது உறவினர் ஒருவது திருமணத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்து தனது வீடுக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த சுமார் 150 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications