ராம்தேவ் மீது புகார் கூறிய காங்,. தலைவர் திக்விஜய் சிங் வீடு மீது கல்வீசித் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
போபால்: பாபா ராம்தேவை ரவுடி, கிரிமினல் என்றெல்லாம் விமர்சித்துப் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் வீடு மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
போபாலில் உள்ள திக்விஜய் சிங் வீடு மீது நேற்று இரவு சிலர் கல்வீசித் தாக்கி விட்டு தப்பினர். ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் திக்விஜய் சிங். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள்தான் கல்வீச்சில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ராம்தேவ் குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ஒரு ரவுடியான, கிரிமினலான ராம்தேவ் போன்றவர்கள் டெல்லியை ஆட்டிப் படைப்பதை அனுமதிக்க முடியாது. அவரைக் கைது செய்து டெல்லியை விட்டு விரட்டியது சரிதான். அவரது சொத்துக்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது வீடு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications