வடக்கு மண்டல ஐஜியாக சைலேந்திர பாபு நியமனம்-35 அதிகாரிகள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஐஜிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐஜியாக கோவை கமிஷனர் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்டுள்ள அறிக்கை

டோக்ரா சிறைத்துறை ஐஜி

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி எஸ்.கே. டோக்ரா, சென்னை சிறைத்துறை ஐ.ஜி.,யாக ஏடிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி.,யாக ஆஷிஷ் பெங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவுப் பொருட்கள் சிஐடி பிரிவின் ஏடிஜிபியாக இருந்த டி. ராதாகிருஷ்ணன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பிரிவுக்கான ஏஜிபியாக இருந்த கே. ராதாகிருஷ்ணன், உணவுப் பொருட்கள் சிஐடி பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த கே.பி. மகேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி.,யாக இருந்த கன்ஹு சரண் மஹலி, திருச்சி மத்திய மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக நியமி்க்கப்பட்டுள்ளார்.

மதுரை தெற்கு மண்டல ஐஜி ஆபாஷ் குமார்

சென்னையில், உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி.,யாக இருந்த அபாஷ் குமார், மதுரை தெற்கு மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை தெற்கு மண்டலத்துக்கான ஐ.ஜி.,யாக இருந்த எம்.என். மஞ்சுநாதா, சென்னை சிபிசிஐடி ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை நகர ஆணையராக இருந்த சைலேந்திர பாபு, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த ஆர்.சி. குடவ்லா, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.,யாக இருந்த கே. வன்னிய பெருமாள், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கமிஷனர் அமரேஷ் பூஜாரி

சென்னை போலீஸ் பயிற்சி பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த அமரேஷ் பூஜாரி, கோவை நகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) ஐ.ஜி.,யாக அலெக்சாண்டர் மோகன் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடெமியின் ஐ.ஜி.,யாக பிரதாத் வி. பிலிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி.,யாக ஆர். திருஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் டிஐஜி சந்தீப் மிட்டல்

மதுரைச் சரக டிஐஜி.,யாக இருந்த சந்தீப் மிட்டல், ராமநாதபுரம் சரக டிஐஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சரக டிஐஜி.,யாக இருந்த ஏ.ஜி. மவுரியா, மாநில போக்குவரத்து கழகத்தின் முதன்மை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களைப் போல மொத்தம் 35 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+