எம்.எப்.ஹுசேன் உடல் லண்டனில் அடக்கம்-நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

MF Husain
டெல்லி: பிரபல ஓவியர் எம்.எப். ஹுசேனின் உடலை இந்தியாவில் அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தபோதும் அவரது கடைசி விருப்பப்படி லண்டனிலேயே அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.

இந்துக் கடவுள்கள் குறித்த ஹுசேனின் சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. ஹுசேனின் மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

மீண்டும் இந்தியாவுக்கு வந்து வாழ ஆசைப்பட்ட அவர் லண்டனிலேயே இறந்தார். இந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இருப்பினும் நான் எங்கு இறக்கிறேனோ, அங்கேயே எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஹுசேன் முன்பு தனது குடும்பத்தாரிடம் கூறியிருந்தார். இதனால் அவரது கடைசி ஆசைப்படி லண்டனிலேயே உடல் அடக்கத்தை நடத்த குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

அதன்படி லண்டன், ப்ரூக்வுட் சிமெட்டரி எனப்படும் கல்லறைத் தோட்டத்தில் ஹுசேனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் அடக்க நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்கின்றனர். கலையுலகைச் சேர்ந்த பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+