கடலூர் அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து 20 பேர் காயம்
கடலூர்: கடலூர் அருகே ஆம்னி பஸ் ஒன்று மரத்தில் மோதி குளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 20 பேரும் காயமடைந்தனர்.
சமீபத்தில் சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுச் சென்ற கேபிஎன் ஆம்னி பஸ், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கி பஸ்சில் இருந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்னொரு ஆம்னி பஸ் விபத்து கடலூர் அருகே நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர் அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து பஸ்சில் இருந்த அனைவரும் அலறித் துடித்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்ஸுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications