14ல் பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகள் திறப்பு: ஜெ உத்தரவு
சென்னை: வரும் 14-ம் தேதி பெரியார், வைகை, பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்போக பாசனத்திற்காக பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறுந்துவிடுமாறு தேனி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் தேனி மாவட்த்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட விவசாய பெருமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்போக பாசனத்திற்காக வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாபநாசம், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications