சிபிஐ இயக்குநருடன் நிரா ராடியா திடீர் சந்திப்பு-ஆவணங்களை ஒப்படைத்தார்

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நிரா ராடியாவும் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதையடுத்து இவரை சிபிஐ, அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் கண்காணித்து வந்தனர். இவரது தொலைபேசியை வருமான வரித்துறையினர் ஒட்டுக் கேட்டபோது தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல உண்மைகள் வெளியில் வந்தன.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்ததிலும் நிரா ராடியாவுக்கு முக்கிய பங்குள்ளதும், சில முன்னணி தொழிலதிபர்கள் சார்பில் ராசாவுக்காக ராடியா 'லாபி' செய்ததும் அவரது தொலைபேசி பேச்சுக்கள் மூலம் தெரியவந்தது.
2ஜி ஊழல் வழக்கில் மொத்தம் 125 பேரை சிபிஐ சாட்சிகளாக சேர்த்துள்ளது. அதில் நிரா ராடியாவின் பெயர் 44வது சாட்சியாக இடம் பெற்றுள்ளது.
இதனால் நிரா ராடியாவும் கைதாவார் என்று கருதப்பட்டது. ஆனால், இவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிக பலம் வாய்ந்த கார்ப்பரேட் லாபி செயல்பட்டு, இவரது கைதை தடுத்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சிபிஐ தனது 3வது துணை குற்றப்பத்திரிகையை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் ராடியாவின் பெயர் இடம் பெறலாம் என்று கூறப்படும் நிலையில், இன்று நிரா ராடியா திடீரென சிபிஐ இயக்குநரை சந்தித்தார்.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது நிரா ராடியா தனது தரப்பு நியாயத்தை விளக்கியதாகத் தெரிகிறது. மேலும் 2ஜி விவகாரம் தொடர்பாக சில ஆவணங்களையும் அவர் சிங்கிடம் சமர்பித்ததாகத் தெரிகிறது.
2ஜி வழக்கின் சாட்சிகளில் ஒருவரான நிரா ராடியா சிபிஐ அதிகாரிகளை சந்திக்க உரிமை உள்ளதாக சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications