கோவையில் ஜூலை 29ல் கூடுகிறது திமுக பொதுக் குழு?

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் வரும் ஜூலை 29ம் தேதி கோவையில் தனது பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்ட திமுக முடிவு செய்துள்ளது. அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வதோடு, காங்கிரசுடனான கூட்டணியை தொடர்வதா இல்லையா என்பது குறித்தும் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா, கனிமொழி ஆகியோரின் கைதுகளைத் தொடர்ந்து திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் பல முறை கூடியது. அதில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்து விலகலாம், வெளியிலிருந்து மட்டும் ஆதரவு தரலாம் என்று என்று திமுக தலைவர் கருணாநிதி முன் வைத்த கோரிக்கையை அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசில் திமுக தொடர்ந்து கொண்டுள்ளது.

இந் நிலையில் கோவையில் ஜூலை 29ம் தேதி திமுகவின் பொதுக் குழு கூடவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலல் படுதோல்விக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

திமுகவுக்கு வரிசையாக தோல்வியைத் தந்து கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ள அந்தக் கட்சி கோவையில் இக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் திமுக முப்பெரும் விழாவையும் கொங்கு மண்டலத்திலேயே நடத்த கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால் கவுண்டர்கள் தவிர்த்த பிற சமூகத்தினருக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அதிருப்தியை போக்கும் வகையில் கோவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+