வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தில் பாதி காங்கிரசுகு சொந்தமானது: மேனகா

நிருபர்களி்டம் அவர் பேசுகையில், சிபிஐ அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்பை தனது லாக்கரில் காங்கிரஸ் பூட்டி வைத்துள்ளது. தேவைப்படும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ ஏவி விடப்படுகிறது.
பாபா ராம்தேவ் மற்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவிடம் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை கெளரவமானதாகத் தெரியவில்லை. அவர்களிடம் காங்கிரஸ் கட்சி நடந்து கொள்ளும் விதம் மிக அநாகரீகமானது.
சுவிஸ் நாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் தான் பணத்தை அங்கு பதுக்கி வைத்துள்ளனர்.
எனவேதான் கறுப்புப் பணத்துக்கு எதிராக குரல் எழும்போதெல்லாம் அதை நசுக்க காங்கிரஸ் முயல்கிறது.
ஆகஸ்டு 16ம் தேதியில் இருந்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பது பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications