நெல்லை ஜங்ஷனில் திருநங்கைகள் அட்டகாசம்-தடுக்க பயணிகள் கோரிக்கை!
நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் திருநங்கைகள் மற்றும் விபச்சார அழகிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அங்கு வரும் பயணிகள் முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயி்ல் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ரயில்கள் வரும்போதும் கூட்டம் அலைமோதும்.
ஒரு காலத்தில் மும்பை ரயில் நிலையங்களில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகளவில் இருந்தது. பயணிகளை மிரட்டி பணம் பறித்தல், விபச்சாரத்திற்கு அழைத்தல், உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடந்தன. போலீசாரின் நடவடிக்கையால் திருநங்கைகளின் நடமாட்டம் கட்டுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீப காலமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன் ஒரு சில திருநங்கைகள், அழகிகள் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவர்களை விபசாரத்திற்கு அழைக்கின்றனர்.
பயணிகளை அழைப்பதில் மோதல் ஏற்பட்டு அவர்கள் கட்டிப்புரண்டு சண்டை போடுகின்றனர். வாய் கூசும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதால் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்மணிகளும், குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியிலும் அழகிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இது போல் திருட்டு, வழி்ப்பறி கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பயணிகளோடு பயணிகளாக கலந்து அவர்களது உடைமைகளை சுருட்டு கொண்டு மாயமாகி விடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications