எங்கள் கை சுத்தம்: சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள்
புட்டபர்த்தி: சாய் அறக்கட்டளை பணத்தை எந்த ஒரு உறுப்பினரும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்று அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சம் சாய்பாபாவுக்கு சமாதி கட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் பாபாவின் தனி அறையில் இருந்து ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் 307 கிலோ வெள்ளி இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் வங்கியில் டெபாசிட் செய்யப்போவதாக அறக்கட்டனை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அடுத்த 2 நாட்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக சாய்பாபாவின் உறவினரான ரத்னாகரிடமும் விசாரித்தனர். அறக்கட்டளை நன்கொடை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் குறித்து அறக்கட்டளை உறுப்பினரான வி. சீனிவாசன் கூறியதாவது,
சாய்பாபாவின் உறவினரான ரத்னாகரை சில பக்தர்கள் அணுகி பாபாவுக்கு சமாதி கட்ட நன்கொடை அளிக்குமாறு கேட்டனர். அதற்காகத் தான் அந்த ரூ. 35 லட்சம் கொடுக்கப்பட்டது. அறக்கட்டளை செயல்பாடுகள் எந்த ஒளிவு, மறைவின்றி நடக்கின்றது.
கடந்த 18-ம் தேதி மகா சமாதி அமைக்க பெங்களூரைச் சேர்ந்த கட்டிட ஆலோசகர் ஒருவரிடம் பணம் கொடுக்கப்பட்டது. அவருடைய காரை போலீசார் வழிமறித்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
உடனே அந்த ஆலோசகர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மகா சமாதி அமைக்க கொடுக்கப்பட்டது என்றும், அதை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி போலீசாரிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.
இந்த பணத்தை நன்கொடையாகக் கொடுத்தவர்களும் மகா சமாதி அமைக்கத் தான் ரத்னாகரிடம் ரொக்கத்தை கொடுத்ததாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் வங்கி கணக்கு எண்ணையும் சமர்பித்துள்ளனர். இந்த நிதிக்கும், அறக்கட்டளைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றார்.
அப்போது இன்னொரு அறக்கட்டளை உறுப்பினரான நாகானந்த் உடனிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ஆளுநர் நரசிம்மனை சந்தித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications