Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரையிலான மாணவ, மாணவியர் இந்த இலவச பஸ் பாஸ்களைப் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

அதேபோல அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியருக்கும் இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது சில மாணவ, மாணவியருக்கு ஜெயலலிதா தனது கையால் இலவச பஸ் பாஸ்களை வழங்குவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+