சர்வதேச விமானத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 3 பேர் கைது
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறக்கையில் குடித்துவிட்டு கும்மாளம் செய்த 3 பயணிகள் செய்யப்பட்டனர்.
232 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படும். விமானத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த தினகரன் (30), திருவாரூரைச் சேர்ந்த அந்தோணி மெர்வின் (32), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராம்பாபு (28) ஆகிய 3 பேர் 2 முறை மது அருந்திவிட்டு மீண்டும் மது கொடுக்குமாறு விமானப் பணிப் பெண்களிடம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட அளவு தான் மது அருந்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே அதிகம் குடித்துள்ளீர்கள் என்று கூறி பணிப் பெண்கள் கூடுதலாக மது கொடுக்க மறுத்துவிட்டனர்.
அவ்வளவு தான் போதை ஆசாமிகள் 3 பேரும் பணிப் பெண்களுடன் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் ஒரு பணிப் பெண்ணை தாக்கவும் முயன்றனர். பயந்து போன அவர்கள் கேப்டனிடம் தெரிவித்தனர். விசாரிக்க வந்த அவரிடமும் இந்த 3 பேர் தகாராறு செய்தனர்.
இவர்களிடம் பேசி பயனில்லை என்று தீர்மானித்த கேப்டன் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கியவுடன் அவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்தார்.
விமானத்தை தரையிறக்கும் முன் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். போதை ஆசாமிகள் 3 பேரும் சீட் பெல்டை மாட்டாமல் எழுந்து நின்று ஆட்டம் போடத் துவங்கிவிட்டனர். இதனால் விமானம் தரையிங்க முடியாமல் 15 நிமிடம் வானில் வட்டமிட வேண்டியதாகிவிட்டது.
இவர்கள் ரகளையைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக சீட்டில் அமர வைத்து சீட் பெல்டை மாற்றினர். அதன் பிறகு விமானம் தரையிறங்கியது. இந்த ரகளையால் 10. 25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 10.40 மணிக்கு தரையிறங்கியது.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன் ஏர் இந்தியா நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் வந்து போதை பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை முடிந்த பிறகு அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications