நிலமோசடி- கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் கைது
கொடைக்கானல்: நிலமோசடி செய்தவர்களுக்கு துணைபோன கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் முகமது இபுராகிம் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சிவனடி ரோட்டைச் சேர்ந்தவர் சேவியர் மைக்கேல். இவரது மகன் ஜான் ரோசர். இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில் ஜான் ரோசர் சென்னையில் உள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சென்னையைச் சேர்ந்த உத்தம்சன் சல்லடா, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழில் அதிபர் பழனிச்சாமி ஆகியோர் எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டனர். மேலும், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வெத்து தாள்களில் கையெழுத்து வாங்கினர். பின்னர் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அதை இடித்துத் தள்ளினர்.
இதற்கு சென்னையைச் சேர்ந்த ரூபன், கொடைக்கானல் நகரசபை தலைவர் முகமது இபுராகிம், நில புரோக்கர்கள் துலிப் சிங், சேகர் செபாஸ்டியான் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சிவக்குமார் ரோசர் புகார் குறித்து விசாரித்து நிலத்தின் ஆவணங்களை கைபற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இந்த நில மோசடி தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் முகமது இபுராகிம், நில புரோக்கர்கள் துலிப்சிங், சேகர் செபாஸ்டியான் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு மாஜிஸ்திரேட் மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அந்த 3 பேருக்கும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யவும், சிறையில் முதல் வகுப்பு வழங்கவும், 3 பேரையும் வருகிற 27-ம் தேதி வரை காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் 3 பேரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications