திமுகவில் கோஷ்டிகளை ஒழிக்குமாறு கருணாநிதிக்கு 'அட்வைஸ்' செய்த நிரா ராடியா!
டெல்லி: ராசாவுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தர ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி 'லாபி' செய்ததாக, லாபிக்குப் பேர் போன நிரா ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரம் தொடர்பாக நிரா ராடியாவிடம் சிபிஐ பல முறை விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது. இந்த வாக்குமூல விவரத்தை தனது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. இதில் சில விஷயங்கள் வெளியே வந்தன. பல விஷயங்கள் வெளி வரவி்ல்லை.
இந் நிலையில், நிரா ராடியாவின் வாக்குமூலம் குறித்த இதுவரை வெளிவராத தகவல்களை சிபிஐ வெளியில் கசிய விட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராசாவுக்கு எப்படியாவது தொலைத் தொடர்புத்துறையை பெற்றுத் தர அனில் அம்பானி மிகக் கடுமையாக முயன்றதாகவும், இதை ஏர்டெல் நிறுவன அதிபரான சுனில் மிட்டல் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராடியா கூறியுள்ளார்.
வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் பி.ஆர்.ஏஜென்சி நடத்தி வரும் நிரா ராடியா, தனது கார்பரேட்-அரசியல் தொடர்புகள் மூலம் யாருக்கு எந்த அமைச்சர் பதவியைத் தருவது என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு அதிகாரத்துடன் திகழ்ந்தார். இதனால் யாருக்கு எந்த இலாகா கிடைக்கப் போகிறது என்பதை மூத்த பத்திரிக்கையாளர்களே ராடியாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது.
சிபிஐயிடம் ராடியா அளித்துள்ள வாக்குமூலத்தில், அனில் அம்பானியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு ராசாவை அறிவுறுத்தியதாகவும், கனிமொழியை இன்னும் தீவிரமான அரசியலில் ஈடுபடுமாறு அட்வைஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடனும் தொலைபேசியில் பேசியதாகவும், திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து (அழகிரி கோஷ்டி, மாறன் கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி) அவருடன் பேசியதாகவும், கனிமொழிக்கு மேலும் அதிகமான முக்கியத்துவம் தருமாறு கூறியதாகவும் ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் கோஷ்டிகளை ஒடுக்கினால் தான் டெல்லியில் திமுக தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் ராடியா தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications