நிலமோசடி-வள்ளியூர் காவல் நிலையத்தில் குவியும்-ஒரே நாளில் 116 பேர் புகார்
வள்ளியூர்: வள்ளியூரில் நில மோசடி தொடர்பாக நேற்று ஒரே நாளில் 116 பேர் தனிப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதில் முதல் கட்டமாக 4 பேரின் மனுவுக்கு வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நில மோசடி அதிகரித்து வருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளன. நில மோசடி தொடர்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு முகாம் காவல்துறை உட்கோட்டத்தில் நடத்தப்படுகிறது.
நேற்று வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். நில மோசடி தொடர்பாக விசாரிக்கும் தனிப்பிரிவு டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜூ, செந்தாமரைகண்ணன் உள்பட தனிப்பிரிவு போலீசார் நில மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் மனுககளை பெற்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள நில மோசடி புகார்களை அந்தந்த காவல் நிலையத்தில் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை, உவரி, பணகுடி, கூடன்குளம், ராதாபுரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்களும், ஆண்களும் காலையில் இருந்தே வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க நீண்டவரிசையில் நின்றிருந்தனர். மொத்தம் 116 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications