ராசா உள்பட 3 பேரிடம் 3 மணி நேரம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

PM with Raja
டெல்லி: முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட 3 பேரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாட்டியாலா கோர்ட் வளாகத்திலேயே விசாரணை நடந்தது.

ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ரிலையன்ஸ் அடாக் குழும நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி, விசாரணைக்கு அனுமதி அளித்தார். மூன்று பேரிடமும் தலா ஒரு மணி நேரம் விசாரணை நடத்தலாம் என நீதிபதி அனுமதி கொடுத்தார்.

இதையடுத்து 2 மணிக்கு விசாரணை தொடங்கி நடந்தது. இதில் ராசா உள்ளிட்ட மூன்று பேரிடமும் பல்வேறு விளக்கங்களை சிபிஐ கோரியதாக தெரிகிறது.

வழக்கமாக தஙக்ளது காவலில் எடுத்து யாரையும் விசாரிப்பது சிபிஐயின் வழக்கம். இருப்பினும் ராசா உள்ளிட்டோரை, சிபிஐ கோர்ட் அமைந்துள்ள பாட்டியாலா கோர்ட் வளாகத்திலேயே வைத்து விசாரித்தது சிபிஐ.

இதற்கிடையே, ஏற்கனவே 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சிபிஐ தற்போது 3வது குற்றப்பத்திரிக்கையைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளது. இன்று நடந்த விசாரணையின் அடிப்படையில் சில முக்கியத் தகவல்களை தனது 3வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+