2ஜி ஊழலில் சிதம்பரத்தின் பங்கென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
திருச்சி: மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2ஜிஅலைக்கற்றை ஊழலில் ப. சிதம்பரத்தி்ன் பங்கு என்ன என்று மனதில் கேள்வி எழுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மும்பையில் மக்கள் கூடும் வணிகப் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கவில்லையா? பாதுகாப்புத்துறை தயார் நிலையில் இல்லையா? போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இடதுசாரி அதி தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. நடைபெறும் சம்பவங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2ஜிஅலைக்கற்றை ஊழலில் சிதம்பரத்தின் பங்கு என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் சொல்லில் காட்டும் தீவிரத்தை, செயலில் காட்டவில்லை. எனவே, அவர் பதவி விலக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications