சாட்சிகள் உள்ள ஊர்களுக்கும் அமெரிக்காவுக்கும் போகக் கூடாது- நித்தியானந்தாவுக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

Nithyanantha
பெங்களூர்: சாட்சிகள் உள்ள ஊர்களுக்குப் போகக் கூடாது. அமெரிக்காவுக்குப் போகக் கூடாது. சாட்சிகளை கலைக்க முயலக் கூடாது என்று பல்வேறு தடைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு விதித்துள்ளது.

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடாதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அங்கு நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி அவர் ராம்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றார் நித்தியானந்தா.

இந்த நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சாட்சிகளை நித்தியானந்தா மிரட்டுவதாகவும், கலைக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில் இன்று அதன் மீது தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, சாட்சிகளைக் கலைக்க நித்தியானந்தா முயற்சிக்கக் கூடாது. சாட்சிகள் வசிக்கும் ஊர்களுக்குப் போகக் கூடாது. அமெரிக்காவுக்கு அனுமதியில்லாமல் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கோர்ட் பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+