ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
சென்னை: சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2 கோடி மதிப்புள்ள செல்போன்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது சென்னையில் உள்ள 4 நிறுவனங்களுக்கு, சீனாவில் இருந்து பொருட்கள் வந்ததை கண்டுபிடித்தனர். பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அவற்றில் ஏராளமான புதிய செல்போன்கள் இருந்தன.
பார்சல்களில் மத்திய அரசின் அனுமதி பெற்ற முத்திரைகள் எதுவும் இல்லை. சட்டவிரோதமாக இவை கடத்தி வரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் சுங்க தீர்வை மற்றும் விற்பனை வரி மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. செல்போன்கள் வந்த நிறுவனங்கள் பற்றி விசாரித்த போது அவை போலியானது என தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.2 கோடி மதிப்புள்ள 12,449 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செல்போன்கள் தவிர, வைரங்கள் கடத்தல் போன்றவை மூலம் இதுவைர ரூ.40 கோடி வரை வரி மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications