சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு

புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவை எண்ணப்பட்டு வருகிறது. பாபாவின் தனி அறையான யஜுர் மந்திரில் உள்ள சொத்துக்கள் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1.90 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாய் அறக்கட்டளை அதிகாரிகள் முன்பு இன்றும் தொடர்ந்து சொத்துக்கள் கணக்கிடப்படுகிறது.
இது குறித்து அனந்தபூர் மாவட்ட கலெக்டர் துர்காதாஸ் நேற்றிரவு கூறியதாவது,
காலை 10-45 மணிக்கு சொத்துக்கள் எண்ணும் பணி துவங்கியது. இது சுமார் 12 மணி நேரம் நடந்தது. இதற்கு முன்பு திறக்கப்படாத 6 அறைகள் திறக்கப்பட்டன. அதில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
தங்க வளையள்கள், கம்மல்கள், வெள்ளிக் குவளைகள், வெள்ளிப் பாத்திரங்கள், கரண்டிகள், பூஜை பொருட்கள், விலை உயர்ந்த புடவைகள், சட்டைகள், பேண்ட்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று விலை உயர்ந்த பொருட்கள் மேலும் பல அறைகளில் இருக்கக்கூடும் என்று நம்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 16-ம் தேதி தான் முதன்முதலாக சொத்துக்கள் எண்ணப்பட்டது. அப்போது ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகள், 307 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன. இரண்டாவது முறையாக கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டபோது ரூ. 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன.
இன்றும், நாளையும் தொடர்ந்து சொத்துக்கள் எண்ணப்படுகிறது. ஆசிரமத்தில் உள்ள மேலும் பல அறைகளில் இருந்து புதையல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications