திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்திய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மணப்பாறை சாலையில் உள்ளது வீரப்பூர். அதன் அருகே உள்ள அனியாப்பூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி. முத்துசாமி உள்ளிட்ட சிலர் வீரப்பூர் பகுதியில் சூதாட்ட கிளப் நடத்துவதாக வையம்பட்டி எஸ்.ஐ. அரங்கநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் நேற்றிரவு நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட கிளப் நடத்தியதற்காக அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications