மெட்ரோ வாட்டர் பணிகளால் பிஎஸ்என்எலுக்கு நஷ்டம் 1.96 கோடி!!
சென்னை: புறநகர் பகுதிகளில் நடக்கும் மெட்ரோ வாட்டர் பணிகளால் பிஎஸ்என்எல்லுக்கு ரூ 1.95 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இத்தகவலை பிஎஸ்என்எல்லின் பொதுமேலாளர் (வடக்கு) சி பெரியசாமி தெரிவித்தார்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் நடக்கும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் பணிகள் காரணமாக, அந்தப் பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் கேபிள்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சி பெரியசாமி கூறுகையில், "இந்த மெட்ரோ வாட்டர் பணிகளால் ஏராளமான கேபிள்கள் சேதமடைந்துள்ளன. ஜேசிபி எந்திரங்கள் மூலம் அனைத்து கேபிள்களையும் தோண்டிப் போட்டுவிட்டனர். இதனால் தொலைபேசி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தாலும், அவர்கள் புகாரை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்து விடுகின்றனர்.
இதனால் பிஎஸ்என்எல்லுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தினமும் சண்டையிடும் நிலை. கிட்டத்தட்ட ரூ 1.95 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது," என்றார்.
அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் மட்டும் பிஎஸ்என்எல்லுக்கு 78000 தரைவழி இணைப்புகளும், 36000 பிராட்பேண்ட் இணைப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications