போலி ஆவணம் மூலம் நிலமோசடி- ஆசிரியர், பெண் கவுன்சிலர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில், ஆசிரியர், பெண் கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு சொந்தமான இருபத்து மூன்றே முக்கால் சென்ட் நிலம் வடக்கு குண்டல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை மேலக்காட்டு விளையை சேர்ந்த முருகேசன் மற்றும் தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகேசன் ஆகியோர் விலைக்கு கேட்டனர். ஆனால் செல்லையா மறுத்து விட்டார்.
இந்நிலையில் 23.5.11ம் தேதி தனது நிலத்தில் நின்று கொண்டிருந்த செல்லையா, அவரது மகன் கண்ணையாவை முருகேசன் தரப்பினர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்று ஆவணங்களை காட்டினர்.
இதையடுத்து கடந்த 31.5.2011ல் அன்று கண்ணையா எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். உயிருடன் இருக்கும் எனது தந்தை செல்லையா இறந்து வி்ட்டதாக கூறி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிப்பு செய்ததாக கூறி இருந்தார். இது குறித்த விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார்.
விசாரணையி்ல் செல்லையா இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிப்பு செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மேலக்காட்டுவிளையை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி கவுன்சிலர் தமிழ்செல்வி, ஆசிரியர் முருகேசன், நாகர்கோவில் புலவர்விளையை சேர்ந்த ரமேஷ், பாஸ்கர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications