உள்ளாட்சித் தேர்தல்: புதுவை நிர்வாகிகளுடன் விஜயகாந்த் திடீர் ஆலோசனை
சென்னை: புதுவை தேமுதிக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீர் என்று ஆலோசனை நடத்தினார்.
புதுவை தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், மாநில இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், புதுவை மாநில பொறுப்பாளர் ராமதாஸ் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு விஜயகாந்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், புது உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், உள்ளாட்சித் தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் தனது கட்சியை வளர்க்க விஜயகாந்த் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே புதுவை நிர்வாகிகளுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications