சென்னை- தகுந்த சீல் இல்லாத 650 குடிநீர் கேன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், தகுந்த முறையில் சீல் செய்யாமல் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 650 கேன்கள் அதிகாரிகளிடம் சிக்கின.
சென்னை அண்ணா சாலையில், சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதிரோசலின், துப்பரவு ஆய்வாளர் வாசுதேவன், உணவு ஆய்வாளர்கள் கண்ணன், ராஜா முகமது ஆகியோர் லாரி ஒன்றில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட குடிநீர் கேன்களை ஆய்வுச் செய்தனர்.
லாரியில் பிரபல குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தின் கேன்கள் இருந்தன. ஆனால் அவற்றில் பல கேன்கள் தகுந்த முறையில் சீல் செய்யப்படாமல், அழுக்கடைந்து காணப்பட்டன. மேலும் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தன.
இதையடுத்து லாரியில இருந்த 650 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications