6 குழந்தைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பு- உப்பளத் தொழிலாளி அடித்து கொலை

Subscribe to Oneindia Tamil

ஆறுமுகநேரி: குழந்தைகளின் தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த உப்பள தொழிலாளி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி முள்ளகாடு அருகே உள்ள பொட்டல்காட்டைச் சேர்ந்தவர் ஈனமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஜெயலட்சுமிக்கும் ஆத்துர் கோவங்காட்டில் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும் அதே பகுதியைச் சேர்ந்த இலங்கை ராஜா என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது.

இதையறிந்த ஈனமுத்து மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கை ராஜாவுடன் சென்று விட்டார். இது ஈனமுத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேற்று இலங்கை ராஜா வேலை செய்யும் உப்பளத்திற்கு சென்ற ஈனமுத்து அவரை உருட்டு கட்டையால் தாக்கினார். இதில் இலங்கை ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈனமுத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+