செங்கல்பட்டு- நிலை தடுமாறி ஓடி கிணற்றில் பாய்ந்த கார்-காரை ஓட்டிய மாணவர், தலைமை ஆசிரியர் பலி
செங்கல்பட்டு: சாலையோரத்தில் நின்றவர் மீது மோதி நிலைதடுமாறிய கார் 8 பேருடன் கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் இருவர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., பிடிக்கும் மாணவர்கள், அருண்தாஸ் (18), கிருஷ்ணகுமார் (19), மதன்குமார் (18), மிதுன்பிரகாஷ் (18), மோதிலால் (19), மணிகண்டன் (19), அருண் குமார் (18), அஸ்வின்(18). 8 பேரும் கார் ஒன்றில், கல்லூரியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றனர்.
அப்போது, நெம்மேலி அருகே, திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் (50), சாலையோரத்தில் நின்ற, அவரது நண்பர் சார்லஸ் (40) உடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் அப்பகுதியில் வந்த மாணவர்கள் இருந்த கார், திடீரென நிலை தடுமாறி ஓடி, ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் தொடர்ந்து ஓடிய கார் அருகில் உள்ள கிணற்றுள் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி 7 மாணவர்களை உயிருடன் மீட்டனர்.
அதற்குள் காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார் இறந்திருந்தார். இந்த விபத்தில் மாணவன் அருண்தாஸ் மற்றும் சாலையில் நின்ற சார்லஸ் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றார்.












Click it and Unblock the Notifications