கேரளாவில் வினோதம்- குறும்பு மாணவர்களின் முடியை வெட்டிய ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

Hair Cutting
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு கஞ்சிக்கோடு பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்று வரும் சில மாணவர்கள் தங்கள் தலைமுடியை நீளமாக வளர்த்து வந்தனர்.

இதை ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, காலையில், பள்ளிக்கு வந்த முடி வளர்த்த மாணவர்களை, ஆசிரியர் ஒருவர் மைதானத்திற்கு அழைத்து சென்றார். அங்கு மாணவர்களின் தலைமுடியை, தாறுமாறாக வெட்டினார்.

இதனால், வெட்கப்பட்ட மாணவர்கள், பள்ளி முடிந்து வீடுகளுக்கு சென்றனர். மாணவர்களின் தலைமுடி தாறுமாறாக வெட்டப்பட்டதை கண்டு, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் முடியை வெட்டி கேவலப்படுத்திய ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோர், சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் திரண்ட மாணவர்களும், பெற்றோரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குறிப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக பள்ளி முதல்வர் உறுதி அளித்ததை அடுத்து, ஆர்ப்பட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+