பணம், அமெரிக்க குடியுரிமைக்காக ஒசாமாவைக் காட்டிக்கொடுத்த ஐஎஸ்ஐ அதிகாரி?
லண்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்த ரூ. 120 கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தான் ஒசாமா பின் லேடன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்ததாக அமெரி்க்க தேசிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் பேராசிரியரும், ரம் மற்றும் நகை கடத்தல்காரருமான ஆர். ஜே. ஹில்ஹவுஸ் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது,
பணம் மற்றும் குடும்பத்தாருக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டி பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரி ஒருவர் தான் ஒசாமாவைக் காட்டிக் கொடுத்தார்.
ஒசாமா பின் லேடனை அப்போத்தாபாத்தில் வீட்டுச் சிறையில் வைத்து பாதுகாக்குமாறு சௌதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு பணம் கொடுத்து வந்தனர்.
அதன் பிறகு சிஐஏ ஒசாமா அங்கு தான் உண்மையிலேயே இருக்கிறாரா என்று கண்டறிய முயன்று அதில் வெற்றியும் கண்டது. பின் லேடன் வீட்டை அமெரிக்கா தாக்கப்போகிறது என்று பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். இது தவிர தாக்குதல் நடத்தவும் அவர்கள் அமெரிக்காவுக்கு உதவினர்.
ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அது அழிக்கப்பட்டது பாகிஸ்தானியர்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த பிளாக் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தனை நாட்களாக கொரியர் ஆள் மூலம் தான் ஒசாமா இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications