குமரி அருகே நடுரோட்டில் வாலிபர்கள் மீது மது ஊற்றி அவமதித்த போலீசார்!
குலசேகரம்: கன்னியாகுமரி அருகே மதுக் கடைக்குச் சென்று திரும்பிய இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், அவர்கள் மீது மதுவை ஊற்றி அவமதிப்பது போல நடந்து கொண்டது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
குமரி மாவட்டம் குலசேகரத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள மலைகிராம மக்கள் சிலர் வந்து குடித்து செல்வது வாடிக்கை. 2 கடைகளிலும் பார் வசதி இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கடையில் மது வாங்கிய சிலர் சாலை ஓரத்தில் நின்று குடித்தனர். அப்போது குலசேகரம் அரசமூடு சந்தி்ப்பில் உள்ள காவல் நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது டிப்டாப் உடையணிந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் டாஸ்மாக சரக்கை வாங்கி இடுப்பில் சொருகி வைத்திருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதித்தனர். வண்டிக்கான எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தது. இதனால் பைக்கில் பின்னால் இருந்த வாலிபரை சோதனை போட்டனர்.
அவரிடம் மது பாட்டில் ஓன்று சிக்கியது. இதுகுறித்து கேட்ட போலீசாரிடம் வீட்டுக்கு சரக்கு வாங்கி செல்வதாக வாலிபர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென போலீசார் அந்த வாலிபர்கள் வைத்திருந்த மதுபாட்டிலை பிடுங்கி திறந்து வாலிபர்களின் தலையில் மதுவை ஊற்றினர்.
எதிரே பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் இதை வேடிக்கை பார்த்ததால் 2 வாலிபர்களும் அவமானத்தால் தவித்தனர். சிலர் போலீசாரை தட்டி கேட்டனர். அதற்கு போலீசார் அலட்சியமாக பதில் கூறினர்.
இது என்ன புதுவித தண்டனையோ!
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications