அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு விசாரணை 22-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்யத் தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுரேஷின் அலுவலகத்துக்கு தீ வைத்தது, சுரேஷின் தம்பி நடத்தி வரும் டாஸ்மாக் பார் மீது வெடிகுண்டு வீசியது ஆகிய வழக்குகளிலும் சதி திட்டம் தீட்டியதாக அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அனிதா ராதாகிருஷ்ணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (17-ம் தேதி) நடைபெற இருந்தது. ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. மாறாக வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைதத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications