ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பெண் பக்தரிடம் 214 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

ஏர்வாடி: ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பெண் பக்தரிடம் இருந்து சுமார் 214 பவுன் நகை திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புகழ் பெற்ற முஸ்லீம் வழிப்பாட்டு தலம் ஏர்வாடி தர்க்கா. இங்கு வந்து தொழுகை நடத்தினால் பக்தர்களது வேண்டுதல் நிறைவேறி வருவதாக நம்புகின்றனர். இதனால் இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான்பாட்சா என்பவரது மனைவி முகமீதா. இவர் தனது வேண்டுதலை நிறைவேற்ற ஏர்வாடி தர்கா பெண்கள் தொழுகை பள்ளி அருகே தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது பையை கீழே வைத்து விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேசியதாக கூறப்படுகின்றது. அப்போது, யாரோ மர்மநபர் முகமீதா பையை எடுத்துக் கொண்டு சென்றது விட்டார்களாம். அந்த பையில் சுமார் 214 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து முகமீதா அளித்த புகாரின் பேரில், ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+