ஹஸாரே குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு போன ராகுல்

டெல்லியில் நேற்று தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது. சோனியா காந்தி முன்னிலையில் கட்சியில் சேர விரும்பி நீண்டகாலமாக காத்திருந்தார் சிரஞ்சீவி. ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவே இல்லை. இருந்தாலும் தொடர்ந்து பொறுமையுடன் இருந்து வந்த அவருக்கு ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டு விட்டது.
அதையும் பொருட்படுத்தாமல் நேற்று ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார் சிரஞ்சீவி.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம், சிரஞ்சீவி குறித்து ஓரிரு கேள்விகளை மட்டும் கேட்டு விட்டு அன்னா ஹஸாரே விவகாரத்துக்குத் தாவினர். அன்னாவின் உண்ணாவிரதம் குறித்து கருத்து கேட்டனர். ஆனால் அதற்குப் பதிலளிக்காத ராகுல் காந்தி, ஒரு வார்த்தை கூட பேசாமல் முகத்தை திருப்பியபடி அங்கிருந்து நகர்ந்து போய் விட்டார்.
'நல்ல பதில்' கிடைத்த திருப்தியில் செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.












Click it and Unblock the Notifications