For Daily Alerts
Just In
மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
மதுரை: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மீதான வேட்டை தொடருகிறது. அவருக்கு நெருக்கமான தியேட்டர் உரிமையாளர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை காளவாசல் பகுதியில் ஸ்ரீ என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை, டாக்டர் நவநீதகிருஷ்ணன், அரசு டாக்டர் சரவணப்பெருமாள், அவரது மனைவி, பதிவுத்துறை டிஐஜி அண்ணாமலை மற்றும் அழகிரி வட்டாரத்தைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் ஆகியோர் மிரட்டி வாங்கி விட்டதாக அந்த மருத்துவமனையை முன்பு வைத்திருந்தவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நவநீதகிருஷ்ணன் உள்ளஇட்ட 4 பேரைக் கைது செய்தனர். பொட்டு சுரேஷ் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A Doctor who is very close to Minister M.K.Azhagiri has been arrested in Madurai in a hospital grab case. He and 3 others have been arrested by the police. Pottu Suresh an aide of Azhagiri has also been included in the case.
Story first published: Monday, August 22, 2011, 17:11 [IST]