இந்திய எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா: அமெரி்க்கா தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தனது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக சீனா இந்திய எல்லையில் அதிநவீன அணு ஏவுகணைகளை குவித்து வருகிறது. இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனா பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. இங்கு மேலும் பல சாலைகள், ரயில் தண்டவாளங்களை அமைத்து வருகிறது.

இதனால் இந்திய எல்லையோரம் உள்ள பகுதியை மேம்படுத்தினாலும், இந்த வசதிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் தான் செய்யப்படுகின்றன.

பாகிஸ்தானுடன் சீனா ஒட்டி உறவாடி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. மேலும் சீனா இந்திய பெருங்கடல், மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைப்பதும் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சீனாவில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கி வருகிறது. இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை மேம்பட்டாலும், எல்லையோர பிரச்சனை எரிச்சலூட்டுவதாகத் தான் உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை மூலம் சீனா இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்த இரண்டு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி சென்ற சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா-சீனா இடையே உள்ள உறவை மேம்படுத்தத் முயற்சி மேற்கொண்டார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவில் உள்ள சிக்கல் நீடிக்கத் தான் செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+