ஹசாரேவிற்கு ஆதரவாக புதுச்சேரி சிறை கைதிகளும் உண்ணாவிரதம்
புதுச்சேரி: ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேயின் போராட்டத்தி்ற்கு நாடு முழுவதும் உள்ள பல சிறை
கைதிகள் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நாட்டில் நிழவி வரும் ஊழல்களை களைய, அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு நாடு
முழுவதும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த வரிசையில், சிறை
கைதிகளும் இணைந்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்து காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள
100 தண்டனை கைதிகள் மற்றும் 83 விசாரணை கைதிகள் சேர்ந்து அன்னா ஹசாரேவிற்கு ஆதரவு
தெரிவித்து, மதிய உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 100 பேர்,
விசாரணை கைதிகள் 83 பேர், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதிய
வேளையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல், உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோல்கட்டா பிரிசிடன்சி மத்திய சிறையிலும் கொலை குற்றவாளிகளான சிலர் உட்பட 30
கைதிகள், நேற்று அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோல ஜார்க்கண்ட்,
பெல்காம், ராஞ்சி, திகார் என நாடு முழுவதும் உள்ள பல சிறைகளில் கைதிகள் சிலர்
உண்ணாவிரதம் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கூறுகையில், அன்னா ஹசாரேயின் நாட்டிற்காக
தன்னையே தியாகமாக அளிக்கிறார். அதற்கு ஆதரவு அளிக்க போவதாக சிறைக் கைதிகள் கூறிய
போது, ஆச்சரியப்பட்டாலும் அதற்கு அனுமதி அளித்துவிட்டோம், என்றனர்.












Click it and Unblock the Notifications