தூக்கு தண்டனையை நீக்க தனக்கு அதிகாரமில்லை என்ற ஜெயலலிதா பேச்சு சரியல்ல: மணியரசன்
மதுரை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்க தனக்கு அதிகாரமில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுவது சரியில்லை என்று தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அப்பாவித் தமிழர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். அவர்களின் தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது சரியில்லை.
அரசமைப்புச் சட்ட விதி 161 மற்றும் 72 உட்பிரிவு(3) ஆகியவை குடியரசுத் தலைவர் நிராகரித்த கருணை மனுக்களை மாநில ஆளுநர் ஏற்று தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. விதி 72ன் படி குடியரசுத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் வழங்குகிறது.
அதே விதியின் உள்பிரிவு(3) ன்படி குடியரசுத் தலைவர் ஒரு கருணை மனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும், அதை மாநில ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் தம் அதிகாரப்படி எந்த முடிவையும் எடுக்கலாம் என்று உரிமை அளித்துள்ளது.
இந்த உரிமையை உச்சநீதிமன்றம் தயாசிங் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கிலும், திரிவேணிசெல் எதிர் குஜராத் மாநில அரசு என்ற வழக்கிலும் உறுதி செய்துள்ளது. இவை குறித்தெல்லாம் கடந்த 15 நாட்களாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு அரசியல் இயக்கங்களும், குடியுரிமை அமைப்புகளும், சட்ட வல்லுநர்களும், தெளிவாக எடுத்துக் கூறி வருகின்றனர்.
பி.யூ.சி.எல். அமைப்பு முதலமைச்சருக்கு தேவையான சட்ட சான்றுகளுடனும், தீர்ப்புகளுடனும் தமிழக முதல்வருக்கு கடிதம் கொடுத்துள்ளது. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்பு முதல்வராக இருந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர்.கிருஷ்ண அய்யர் ஆகியோர் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தனர்.
அதன்பின் இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றி பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்.
அதை விட்டுவிட்டு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது சரியல்ல. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் விதி 110கீழ் வெளியீட்டுள்ளார்.
முதல்வரின் அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவும் 3 தமிழர் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் கையாளப்பட்ட உத்தியல்ல என்பது தெளிவாகும்.
முதல்வர் ஜெயலலிதா மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெ.மணியரசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications