செப். 2வது வாரத்தில் இந்தியா திரும்புகிறார் சோனியா காந்தி
டெல்லி: அமெரிக்காவில் அறுவைச் சிகிச்சை செய்து பின்னர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செப்டம்பர் 2வது வாரத்தில் டெல்லி திரும்பவுள்ளார்.
சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக உலகிலேயே மிகவும் பிரபலமான நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
தற்போது அவர் செப்டம்பர் 2வது வாரத்தில் இந்தியா திரும்புவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி திரும்பினாலும் கூட அவர் கட்சிப் பணிகளுக்குத் திரும்பி வர சில வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை அவர் நியூயார்க்குக்குச் செல்வதற்கு முன்பு அமைக்கப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவே கட்சிப் பணிகளை கவனிக்கும் என்று தெரிகிறது.
சோனியா காந்தி இல்லாத நிலையில், அன்னா ஹஸாரே விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசும், காங்கிரஸும் கடுமையாக திணறிப் போய் விட்டன, தடுமாறி மக்களிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications