தங்கம் விலை மீண்டும் 21 ஆயிரத்தைத் தொட்டது!
சென்னை: தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரன் ரூ 21 ஆயிரத்தைத் தொட்டது.
அமெரிக்க டாலரின் விலை வீழ்ச்சி, கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி ஒரு பவுன் 21 ஆயிரத்தை தாண்டியது.
பின்னர் படிப்படியாக சரிந்து, ரூ 20000-க்குள் வந்தது. ஆனால் இந்த நிலை ஒரு நாள் மட்டுமே நீடித்தது. நேற்று மாலை தங்கம் விலை அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 808 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு மேலும் ரூ.280 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 88 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,636-க்கு விற்கிறது. திருமண முகூர்த்த நாள், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு என விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களை தயாராக வைத்துள்ளனர் விற்பனையாளர்கள்.
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளியின் விலையிலும் இன்று உயர்வு காணப்பட்டது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.64 ஆயிரத்து 755 ஆக இருந்தது. இன்று கிலோவுக்கு ரூ.1,230 உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 985 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.70.60-க்கு விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications