சென்னையில் கடல் கடும் கொந்தளிப்பு- மெரீனா பீச்சுக்கு மக்கள் வரத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறது. இதனால் கடற்கரைக்கு வர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறான அளவில் அலைகள் பெரிதாகவும், சீற்றத்துடனும் காணப்படுவதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் கடற்கரைக்கு வந்தவர்களும் கூட பயத்தில் மூழ்கினர். இதையடுத்து குதிரைப் படை போலீஸார் அங்கு ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடற்கரைக்கு வந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்கரைக்கு வர வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications