கடாபி நைஜரில் இல்லை: சொல்கிறது அமெரிக்கா
நைஜர்: நைஜரில் தலைமறைவாக இருப்பதாக கருதப்பட்ட கடாபி அங்கே இல்லை என அமெரிக்க தெரிவித்துள்ளது.
லிபிய தலைவர் கடாபி மற்றும் அவரது 3 மகன்கள் நைஜரில் தலைமறைவாக இருக்கலாம் என கருதப்பட்டது. இதையடுத்து, அவர்களை பிடிக்க, 200க்கும் மேற்பட்ட வாகனங்களில், லிபிய புரட்சி படையினர் நைஜரில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நைஜருக்கு தப்பியோடியவர்களில் கடாபி இருக்கவில்லை என அல்-அரேபியா சேனல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த செய்தியை, அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா கூறுகையில், லிபியாவின் முக்கிய அதிகாரிகள், நைஜருக்கு தப்பியோடியது உண்மைதான். ஆனால், அவர்களில் லிபியா தலைவர் கடாபி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் திரிபோலியில் இருந்து தப்பியோடிய குழுவுடன் கடாபி இருக்கவில்லை. அவர் தனியாகத்தான் தப்பினார். அதுபோல, லிபியாவில் கடாபி இருப்பதற்கான எந்த சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
முன்னதாக புரட்சிப் படையினரும் நைஜர் முழுவதும், கடாபியை தேடி, அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications