இந்திய கலைஞரின் படங்களை கண்காட்சியில் வைத்துள்ள பாகிஸ்தான்
லாகூர்: பாகிஸ்தானில் நடந்த கண்காட்சி ஒன்றில், இந்திய புகைப்பட கலைஞரின் போட்டோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்தவர் டி.எஸ்.ஜெஸ்பால். இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவில்களுக்கு சென்று, கோவில்களை படப்பிடித்துள்ளார். அதேபோல இரு நாடுகளிலும் உள்ள சீக்கிய கோவில்களை பற்றிய புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் ஆல் ஹம்ரா கலை கழகத்தில் நடக்கும் புகைப்பட கண்காட்சியில், டி.எஸ்.ஜெஸ்பால் எடுத்த போட்டோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் 58 சீக்கிய குருத்துவராக்களின் போட்டோக்கள் உள்ளன. பஞ்சாப் மாநில அரசின் மூத்த அதிகாரியாக ஜெஸ்பால், கடந்த 3 ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த போட்டோக்களை எடுத்துள்ளார்.
இதுகுறித்து, டி.எஸ்.ஜெஸ்பால் கூறியதாவது, சீக்கிய குருத்துவாராக்களை குறித்து நான் எழுதிய புத்தகத்தை கடந்தாண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். இந்தியா- பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த இளம்வயதினர் இடையேயான நட்பு அதிகரிக்கும் போது, இருநாடுகளிடையே சமாதானமும் அதிகரிக்கும், என்றார்.












Click it and Unblock the Notifications