பாலியல் புகார் கூறி டிஸ்மிஸ் ஆன பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலி குப்தா தற்கொலை

விமானப்படையில் பிளையிங் ஆபிஸராக இருந்தவர் அஞ்சலி குப்தா. 35 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். உயர் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அந்த விசாரணையில், அஞ்சலி கூறியவை பொய்யான புகார்கள் என்று நிரூபிக்கப்பட்டது. மேலும், ஒழுங்கீனம், மேலதிகாரிகளுக்குப் பணியாதது, நிதி முறைகேடு உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவை நிரூபிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவரை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து பெங்களூர் வந்து செட்டிலான அஞ்சலி குப்தா அங்கு தனியார் வேலையில் இணைந்தார்.
இந்த நிலையில் போபாலுக்கு வந்த அஞ்சலி குப்தா, அங்கு குரூப் கேப்டன் அமீத் குப்தாவின் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தங்கினார். அமீத் குப்தா சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெறும் தனது மகனின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
10ம் தேதி இரவு குப்தா குடும்பத்தினர் திரும்பி வந்தனர். அப்போது கதவைத் தட்டியபோது அஞ்சலி திறக்கவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதிய அமீத் குப்தா குடும்பத்தினர், அஞ்சலியை தொந்தரவு செய்ய விரும்பாமல், அரேரா காலனியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்குப் போய் தங்கினர். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அமீத் குப்தா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரது உடலைப் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அஞ்சலி குப்தாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications