'வெளி வேலையில்' கணவர்கள் பிஸி-'உள்வேலை'களுக்குத் தாவும் மலேசியப் பெண்கள்!

இது குறித்து மலேசிய நாளிதழான மெட்ரோ அகாதி்ல் கூறப்பட்டுள்ளதாவது,
மலேசியப் பெண்களில் பலர் தங்கள் உடல் பசியைத் தீர்த்துக் கொள்ள திருமணம் ஆகாத மற்றும் திருமணமான வேறு ஆண்களைத் தேடுகின்றனர். வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவரவர் வீட்டில் மனைவியாகவும், குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்து வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த நாளிதழின் பத்திரிக்கையாளர்கள் வீட்டுக்குத் தெரியாமல் வெளியே உறவு வைத்துக் கொள்ளும் 30-களில் உள்ள சில பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இது பற்றி கேட்டதற்கு, நாங்கள் என்ன செய்வோம். எங்கள் கணவன்மார்கள் எப்பொழுது பார்த்தாலும் வியாபாரம், வியாபாரம் என்று வெளியே சென்றுவிடுகின்றனர். தனிமையாக உணர்வதால் நாங்களும் வெளியே செல்கிறோம் என்றனர்.
அதில் லிண்டா(31) என்ற பெண்மணி கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் 5 பேரிடம் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளேன். என் கணவருக்கு என்னைவிட வேலை தான் முக்கியமாக இருக்கிறது. நான் இவ்வாறு இருந்தாலும் என் கணவரையும், குடும்பத்தையும் விட்டு வெளியே வரமாட்டேன். நான் செய்வது தப்பு என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் தேர்ந்தெடுத்துள்ள இந்த பாதை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
யார் கண்டா, எங்கள் கணவன்மார்களும் அவர்கள் ஆசையத் தீர்த்துக் கொள்ள வேறு பெண்களிடம் போகத் தான் செய்வார்கள் என்று கூறி தங்களின் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications