முல்லைப் பெரியாறில் புது அணை கட்ட ரூ. 666 கோடியுடன் தயாராக இருக்கிறோம்- கேரள அமைச்சர்

இது குறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாகவும், பழைய அணையை என்ன செய்வது என்பது குறித்தும் செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது. இது பற்றி அரசு ஆலோசனை நடத்தியது. பெரியாறு அணையின் மதகு பகுதியில் இருந்து 42 அடி ஆழத்தில் கால்வாய் அமைத்து புதிய அணைக்கு தண்ணீரை கொணடு செல்லலாம்.
அல்லது பேபி ஆணையை உடைத்து தண்ணீரை புதிய அணைக்கு கொணடு செல்லலாம் என்ற 2 கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நேற்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பழைய அணையில் இருந்து ஏராளமான குழாய்கள் அமைத்து புதிய அணைக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை வரும் 26-ம் தேதி உச்ச நீதிமன்ற குழுவிடம் சமர்பிக்கப்படும்.
புதிய அணை கட்டும் முடிவில் எந்த வித மாற்றமும் இல்லை. புதிய அணைக்காக ரூ.666 கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications