சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு

அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் சோனியாவின் உடல் நிலை குறித்து பாலு விசாரித்தார். மூத்த தலைவரான கருணாநிதியின் ஆசிர்வாதத்தைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியா கூறியதாக, பாலு பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 8 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற சோனியா அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்த மாத துவக்கத்தில் தான் நாடு திரும்பினார். அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பது தெரியவில்லை.
நாடு திரும்பிய அவரை மூத்த காங்கிரஸ் தலைவர்களே இன்னும் சந்தித்துப் பேச முடியவில்லை. இந் நிலையில் இன்று அவரை பாலு சந்தித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், திமுக முன்னாள் அமைச்சர் ராசாவும், கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக அதிகாரி சரத்குமாரும் திகார் சிறையில் உள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் கண்டு வருகிறது.
இதன் விளைவாகவே உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை வெட்டி விட்டது திமுக. மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அவர் பதவி விலக வேண்டும் என்றரீதியிலும் கருணாநிதி நேற்று கருத்துத் தெரிவித்து காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பேச்சும் தான் தங்களது இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று இன்று சோனியாவிடம் பாலு விளக்கியதாகவும் தெரிகிறது.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாலு, திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் சோனியா காந்தியிடம் உடல் நிலை குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன். எங்கள் தலைவரின் சார்பில் அவர் பூரண குணமடைய வாழ்த்துத் தெரிவித்தேன். கலைஞர் போன்ற மூத்த தலைவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியா கூறினார் என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications